9 மே, 2010

தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி ஊர்வலம்

தூத்துக்குடியில் நேற்று மாலை, ஆர்.எஸ்.எஸ் ன் அணிவகுப்பு ஊர்வலம் பண்பு பயிற்சி நிறைவு ஊர்வலம் என்ற பெயரில் நடந்தது. இப்பயிற்சி மற்றும் அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. தமிழகம் முழுவதிலுமிருந்து 402 பேர் பங்கேற்ற அப்பயிற்சியில் யோகா, சிலம்பம், கராத்தே, மூச்சுப்பயிற்சி உள்ளிட்டவை நடந்தன. பயிற்சி நேற்றுடன் முடிந்தது.

இதையொட்டி, பயிற்சி நிறைவு அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை காமராஜர் மழலையர் பள்ளியில் துவங்கியது. காமராஜ் கல்லூரி செயலர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். தமிழக பா.ஜ.க, தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. குமரி, வெள்ளிமலை விவேகானந்த ஆசிரம சுவாமி சைதன்யானந்த மகராஜ் , மதுரை, திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி முதல்வர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் வன்னியராஜன், பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் பேசினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி ஊர்வலம்"

கருத்துரையிடுக