புதுடெல்லி:நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருக்கலாம் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறினார்.
டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: "பயங்கரவாதச் செயல்களை செய்து வரும் நக்ஸல்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கவேண்டும். ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாக நக்ஸல்கள் உள்ளனர். துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றனர்.
நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கு என்னிடம் உறுதியான தகவல்கள் இல்லை என்றபோதும் அவர்களுடைய தாக்குதலை வைத்துப் பார்க்கும்போது லஷ்கர்-இ-தொய்பாவுடன் நக்ஸல்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆயுதங்கள், வெடிகுண்டுகள், 100 சதவீதம் தொழில்நுட்ப உறுதியுடன் அவர்கள் நடத்தும் தாக்குதல்களைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள்தான் நக்ஸல்களுக்கு இந்த வகைப் பயிற்சியை அளித்து வருகின்றனர் என்று தெரிகிறது". என்றார்
டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: "பயங்கரவாதச் செயல்களை செய்து வரும் நக்ஸல்களை பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்கவேண்டும். ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலாக நக்ஸல்கள் உள்ளனர். துப்பாக்கி முனையில் ஆட்சியைக் கைப்பற்ற அவர்கள் விரும்புகின்றனர்.
நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கு என்னிடம் உறுதியான தகவல்கள் இல்லை என்றபோதும் அவர்களுடைய தாக்குதலை வைத்துப் பார்க்கும்போது லஷ்கர்-இ-தொய்பாவுடன் நக்ஸல்களுக்கு தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆயுதங்கள், வெடிகுண்டுகள், 100 சதவீதம் தொழில்நுட்ப உறுதியுடன் அவர்கள் நடத்தும் தாக்குதல்களைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் நிபுணர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள்தான் நக்ஸல்களுக்கு இந்த வகைப் பயிற்சியை அளித்து வருகின்றனர் என்று தெரிகிறது". என்றார்
0 கருத்துகள்: on "நக்ஸல்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு- சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்"
கருத்துரையிடுக