20 மே, 2010

நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்.​

மக்களவைச் செயலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திங்கள்கிழமை மர்ம நபர் ஒருவர் பேசினார்.​ அப்போது அவர்,​​ நாடாளுமன்றத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறினார்.​

இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பு வந்த இடத்தை வைத்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.​ ​பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள மைர்வா பகுதியில் இருந்து அழைப்பு வந்ததை போலீஸார் கண்டுபிடித்து​​ வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கீர்த்தி சிங் என்பவரைக் கைது செய்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நாடாளுமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது"

கருத்துரையிடுக