லைலா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதன்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 108 மி.மீ. மழை பதிவானது.
சென்னை அருகே வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள லைலா புயல்,வியாழக்கிழமை மதியம் ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது, வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 60கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உள்பட பல நகரங்களில் சாலைகளில் வெள்ளம் புகுந்ததோடு, மரங்களும் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளிக் காற்று காரணமாக கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் கடும் சேதம் அடைந்ததால், மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு தினங்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தொடர் மழைக்கு சென்னை உள்பட தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அருகே வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள லைலா புயல்,வியாழக்கிழமை மதியம் ஆந்திர கடற்கரை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும்போது, வடக்கு தமிழக கடற்கரை பகுதியில் அதிகபட்சமாக 60கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை உள்பட பல நகரங்களில் சாலைகளில் வெள்ளம் புகுந்ததோடு, மரங்களும் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சூறாவளிக் காற்று காரணமாக கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மீன்பிடி படகுகள் கடும் சேதம் அடைந்ததால், மீனவர்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு அருகில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு தினங்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தொடர் மழைக்கு சென்னை உள்பட தமிழகத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
0 கருத்துகள்: on "லைலா புயலின் சீற்றம்:கன மழையால் வட தமிழகம் பாதிப்பு"
கருத்துரையிடுக