4 மே, 2010

சாதி வெறியர்களிடமிருந்து சரியான பாதுகாப்புத் தாருங்கள் - அரசுவேலை,நஷ்டஈடை தூக்கி எரிந்த தலித் இளைஞன்

ஹிசார்:கடந்த வாரம்,தன் தந்தையையும் ஊனமுற்ற சகோதரியையும் சில மேல் சாதி வெறியர்களால் உயிருடன் எரித்து கொல்லப்பட்டு பாதிப்புகுள்ளாகி இருக்கும் ஒரு தலித் இளைஞன் அரசின் வேலை வாய்ப்பையும் நஷ்ட ஈட்டையும் நிராகரித்துள்ளார்.

'எங்களுக்கு சாதி வெறியர்களிடமிருந்து சரியான பாதுகப்பு தாருங்கள்,அதுபோதும்' என்று பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் குமுறுகின்றார்.

தன் ஊர்வாசிகளை சாதி வெறியர்களுக்கு பறிகொடுத்துள்ள அந்த கிராம மக்களும், கிராமத்தை புறக்கணித்து ஊரைவிட்டு வெளியேறியுள்ளனர்.பல மூத்த அதிகாரிகள் கேட்டுக் கொண்டும், அந்த 30 ஏழை குடும்பங்களும் உயர்சாதி வெறியர்களுக்கு அஞ்சி தங்கள் ஊருக்கு திரும்ப மறுத்துள்ளனர்.

மேலும், தலித் மக்களை அடிக்கடி துன்புறுத்தும் இன வெறியர்களை அடையாளம் கண்டு, மரணதண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 9 இளைஞர்கள் அரசு செயலகத்திற்கு வெளியே உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

உயர்சாதி மக்களின் இந்த இரத்த தாகத்தை வெட்கத்திற்குரிய செயல்! என்று சோனியா காந்தியும் சாடியிருந்தார். இதை தொடர்ந்து, ரகசியமாக ராகுல் காந்தியும் இக்கிராமக்களை சந்தித்தார்.

ஏழை தலித் மக்களை இன்னல்களுக்குள்ளாக்கும் இந்த சாதி வெறியர்கள், அவர்கள்(தலித்) இல்லையென்றால் தாங்கள் ஒரு வேலை பசியைக் கூட போக்க முடியாது என்பதை எப்போதுதான் உணர்வார்களோ?
source:Times of India

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சாதி வெறியர்களிடமிருந்து சரியான பாதுகாப்புத் தாருங்கள் - அரசுவேலை,நஷ்டஈடை தூக்கி எரிந்த தலித் இளைஞன்"

கருத்துரையிடுக