4 மே, 2010

அணுஆயுதம் மூலம் பிற நாடுகளை மிரட்டும் அமெரிக்கா, இஸ்ரேலை விடுத்து ஈரானை மட்டும் கண்டிப்பது ஏன்? அகமதி நிஜாத்

ஐ.நா. சார்பில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாடு கூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பேசிய ஈரான் அதிபருக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.அகமதி நிஜாத் பேசுகையில், முதன் முதலில் அணுகுண்டை உருவாக்கி அதை பயன்படுத்தியது அமெரிக்காதான். இன்றும் கூட அது பெருமளவில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப் பரவலை உருவாக்கியதே அமெரிக்காதான். ஆனால் மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று மிரட்டி வருகிறது.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்.

பிற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய ஹில்லாரி கிளிண்டன், 'அகமதி நிஜாத்தின் பேச்சு வியப்பளிப்பதாக இல்லை, எதிர்பார்த்த ஒன்றுதான்' என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அணுஆயுதம் மூலம் பிற நாடுகளை மிரட்டும் அமெரிக்கா, இஸ்ரேலை விடுத்து ஈரானை மட்டும் கண்டிப்பது ஏன்? அகமதி நிஜாத்"

கருத்துரையிடுக