17 மே, 2010

பணமிருக்கிறதா? கலவரம் ரெடி!

இந்திய தேசத்திற்கும்,ஹிந்துக் கலாச்சாரத்திற்கும் பாதுகாவலர்கள் என்ற முகமூடியை அணிந்துக் கொண்டு களமிறங்குபவர்கள் எத்தகையதொரு அநாகரீகத்தை எதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றார்கள் என்பதும், மிக மோசமான சமூக துரோகிகள்தான் ஹிந்துத்துவத்தின் பேனரில் வெறியாட்டம் நடத்துகிறார்கள் என்பதையும் விளக்கம் கூறாமலேயே புரியவைத்தது டெஹல்கா புலனாய்வு இதழும், ஆங்கில சேனல் ஒன்றும் இணைந்து நடத்திய ரகசிய கேமரா ஆபரேசன் வெளிக்கொணர்ந்த உண்மைகள்.

பணத்திற்காக கொலையும், கொள்ளையும், வழிப்பறியும் நடத்தும் நிழலுக தாதாக்கள் நமக்கு அந்நியர்களல்லர். ஆனால் பணம் வாங்கிக் கொண்டு மதக்கலவரத்தை உருவாக்கும் வெறிக்கொண்ட இயக்கங்களைக் குறித்த செய்தி நமக்கு அபூர்வமான ஒன்றாகும்.

ஒருவேளை இச்செய்தி நமக்கு புதிதாகக் கூட இருக்கலாம். பெண்கள் மதுபானக்கடைகளுக்குச் சென்று மது அருந்துவது இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது எனக்கூறி கடந்த ஆண்டு மங்களூரிலிலுள்ள பப் ஒன்றில் வெறியாட்டம் போட்டவர்கள்தான் டெஹல்காவின் கேமராவில் சிக்கியுள்ளார்கள்.

கர்நாடகாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வுச் செய்து அங்கு ‘லவ் ஜிஹாதை’ ஆதரிக்கும் ஓவியக் கண்காட்சியை நடத்தினால் அதற்கெதிராக களமிறங்கி கலவரத்தை நடத்த நாங்கள் தயார் என்று கூலாக கூறும் பிரமோத் முத்தலிக்கும் அவரது சகாக்களும் சில அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

கர்நாடகாவிலும், வடஇந்தியாவின் பல மாநிலங்களிலும் சிறுபான்மையினருக்கு எதிராக அரங்கேறும் பல கலவரங்களும் பணத்தை வாங்கியோ அல்லது கொள்ளையடித்து பணம் சம்பாதிப்பதை லட்சியமாக்கியோ நடத்தப்பட்டவையாகும்.

மலேகானிலும், அஜ்மீரிலும், ஹைதராபாத்திலும், கோவாவிலும் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் இத்தகைய தேசத்துரோகிகள்தான் காரணம் என்ற உண்மை வெளிவந்ததையும் இத்துடன் சேர்த்து நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்களுக்கு சட்டத்தைக் குறித்து எவ்வித பயமுமில்லை. பல இடங்களிலும் போலீசும், ஆட்சியாளர்களும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு சார்பாகவே நிற்கின்றார்கள்.

குஜராத் மாநிலத்தில் நரோடாபாடியாவுக்கும், வதேதராவுக்கும் இடையே வசித்த முஸ்லிம்களை கொன்றொழித்தது தானும் , தனது நண்பர்களும்தான் என்றும் இனியொரு வாய்ப்பு கிடைத்தால் 50 ஆயிரம் முஸ்லிம்களை கொல்வேன் என்றும் வெளிப்படையாக டெஹல்காவிடம் கூறிய பாபு பஜ்ரங்கி என்ற பஜ்ரங்தள் வெறியனின் ஒரு உரோமத்திற்கு கூட துன்பம் விளையாத தேசத்தில் முத்தலிக்குகள் தொடர்ந்து ஆட்டம் போடுவதற்கு எவ்வித தடையும் ஏற்படப்போவதில்லை.

இவர்களை தீவிரவாதிகள் என்றுகூட கூற இயலாது. ஏனெனில் எல்லைக்கு அப்பால் தான் தீவிரவாதிகள்(?) உள்ளனரே! இந்த தீய சக்திகளை வெளிக்கொண்டுவர எந்த புலனாய்வு விசாரணையும் தேவையில்லை! ஏனெனில் அவர்களே சுயமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள்!
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பணமிருக்கிறதா? கலவரம் ரெடி!"

கருத்துரையிடுக