17 மே, 2010

அஜ்மீர் குண்டுவெடிப்பு:தொழிலதிபர் கைது

இந்தூர்:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய தொழிலதிபர் ஒருவரை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் கைது செய்துள்ளது.

ராஜேஷ் மிஷ்ரா என்ற இந்நபர் கடந்த சனிக்கிழமை இரவு பிதாம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

காங்கிரஸ் பிரமுகர் ப்யார் சிங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்டிருந்த இவர் ஜாமீனில் வெளிவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இத்துடன் அஜ்மீர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தார் மாவட்டத்தில் பிதாம்பூர் தொழில் பகுதியில் எஞ்சினியரிங் நிறுவனத்தின் உரிமையாளர் மிஷ்ரா. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இவரை கடந்த 7மாதங்களாக கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2009 அக்டோபர் மாதம் சி.பி.ஐயும், ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும் அடங்கிய புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் குண்டுவெடிப்பு:தொழிலதிபர் கைது"

கருத்துரையிடுக