12 ஜூலை, 2010

இந்திய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல - அமெரிக்க அதிகாரி

வாஷிங்டன்:இந்தியாவில் உள்ள 160 மில்லியன் முஸ்லீம்களும் தீவிரவாதிகள் கிடையாது என்றும்,என் சமூகம் இப்படி அழைக்கப்படுவதை கண்டு நொந்துப்போயுள்ளதாக இந்திய அமெரிக்கரும்,ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரியுமான ஃபராஹ் பண்டித் கூறியுள்ளார்.

இந்தியாவில் முஸ்லீம்களின் தீவிரவாதம் தலைதூகியுள்ளதா? என்ற கேள்விக்கு ஃபராஹ் ஆவேசமாக பதிலளிக்கையில், ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதிகள் கிடையாது என்றார்.

முஸ்லீம்கள் எந்த விதமான தீவிரவாதத்திலும் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிய ஃபராஹ்,உண்மையைச் சொல்லபோனால் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள 'தீவிரவாதக் கறையை' முஸ்லீம்கள் துடைத்தெறிய போராடுகிறார்கள் என்றார்.

'மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இதில் முஸ்லீம்களும் அடங்குவர் அவர்களும் அவாறான மத்திரையை களைய போராடுகிறார்கள்' என்றார். இந்நாடுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்ந்துவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நடந்து கொண்டிருக்கும் போர்களைப் பற்றி கேள்வி கேட்டபோது, இப்போர்கள் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல என்ற ஒபாமாவின் கருத்தை ஃபராஹ் முன்மொழிந்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல - அமெரிக்க அதிகாரி"

கருத்துரையிடுக