
லண்டனில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சட்ட அமைச்சர் மொய்லி கூறும்பொழுது; வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதற்கான திட்டத்தை, மத்திய சட்ட அமைச்சகம் துவக்கி விட்டது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்றார்.
இது தொடர்பான சட்டம் விரைவில் இயற்றப்படும். தேர்தல் நேரங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். அதுமட்டுமின்றி, அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் ஓட்டளிப்பதற்கான வசதிகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும் உலகம் முழுவதும் 2.2 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர்.வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு, அவர்கள் முன்பிருந்த விலாசம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்றார்.
அதே நேரத்தில், மற்ற நாடுகளின் குடியுரிமை பெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்றும் மொய்லி கூறினார்.
0 கருத்துகள்: on "என்.ஆர்.ஐ. களுக்கான வாக்குரிமை- செயல்படுத்தும் நடவடிக்கைகள் துவக்கம் - வீரப்ப மொய்லி"
கருத்துரையிடுக