10 ஜூலை, 2010

துளசிராம் வழக்கில் ராஜஸ்தான் டி.ஜி.பி.யின் உதவியை நாடும் குஜராத் போலீஸ்

ஜெய்பூர்:துளசிராம் போலி என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரணை செய்ய உதைபூர் சென்ற குஜராத் போலீஸ் குழு அவர்கள் தலைமறைவானதால் வெறும் கையோடு திரும்பியுள்ளது.

இதையடுத்து ராஜஸ்தான் டி.ஜி.பி., மீனாவை இவ்வழக்கில் உதவுமாறு கடிதம் மூலம் குஜராத் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து குஜராத் மாநிலம் உதைபூரை சேர்ந்த 4 போலீஸ் அதிகாரிகளை தலைமறைவானவர்கள் என்று குஜராத் கிரைம் பிரான்ஞ்ச் போலீஸ் அண்மையில் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் இவ்வழக்கில் அவர்களை விசாரிக்க குஜராத் போலீஸ் உதைபூர் சென்றபோது, அவர்கள் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது.

பலமுறை சம்மன்கள் அனுப்பியும் பதில் இல்லாததால்,இவர்களை காணாமல்போனவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் டி.ஜி.பி க்கு குஜராத் போலீஸ் எழுதியுள்ள அக்கடிதத்தில், அவர்கள் தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு இடங்களை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துளசிராம் வழக்கில் ராஜஸ்தான் டி.ஜி.பி.யின் உதவியை நாடும் குஜராத் போலீஸ்"

கருத்துரையிடுக