27 ஜூலை, 2010

கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்

ஆழப்புழா:கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார்.
அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.

மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.

மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரள முதலமைச்சர் பதவி விலகவேண்டும், மன்னிப்பு கேட்கவேண்டும்:கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சில்"

கருத்துரையிடுக