இந்தப் பகுதியில் சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது.





கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் லடாக், லே பகுதியில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
வெள்ளத்துக்கு இப்பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை அலுவலகமும் தப்பவில்லை. வெள்ளத்தில் சிக்கிய 50 வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரில் 3 ராணுவ வீரர்களும் அடங்குவர். மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளம் சூழப்பட்ட பகுதிகளில் ஏராளமானோரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்: on "கஷ்மீர்:லடாக் மற்றும் லே பகுதிகளில் கன மழை - 115 பேர் பலி"
கருத்துரையிடுக