1 ஆக., 2010

'இந்தியா எங்களது அச்சுறுத்தல்,அமெரிக்கா எங்கள் எதிரி'- பாகிஸ்தான் மக்கள் கருத்து

ஆக,1:பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பது இந்தியாவா? தலிபான்களா? அல்லது அல்கொய்தாவா? என அந்நாட்டில் உள்ள 'பே'(பி.இ.டபிள்யூ) ஆய்வு மையம் கருத்து வாக்கு கெடுப்பு நடத்தியது.

அதில் 53 சதவீதம் பேர் அண்டை நாடான இந்தியா பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் தலிபான்கள் என்றும், 3 சதவீதம் பேர் அல்கொய்தா அச்சுறுத்தல் உள்ளது என்றும் கருத்து கூறியுள்ளனர்.

எனவே,இரு நாடுகளுக்கு இடையே உள்ள பதட்டத்தை குறைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒப்பந்தம் செய்ய வேண்டும்.இதன் மூலம் இந்தியாவுடனான வர்த்தகம் பெருகும்.நாடு வளர்ச்சி அடையும் என 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமெரிக்கா பற்றிய எண்ணம் பாகிஸ்தான் மக்களிடையே மிகவும் மோசமாக உள்ளது. அமெரிக்காதான் தங்களின் எதிரி என 59 சதவீதம் மக்கள் கருத்து கூறியுள்ளனர். அவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே அதிபர் பராக் ஒபாமா மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலிபான்கள் வசமாகி விட்டால் பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என 25 சதவீதம் பேரும், 18 சதவீதம் பேர் நல்லது என்றும், 57 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இக்கருத்தை அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் பி.ஜே.கிரவுலி ஒப்புக்கொண்டுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'இந்தியா எங்களது அச்சுறுத்தல்,அமெரிக்கா எங்கள் எதிரி'- பாகிஸ்தான் மக்கள் கருத்து"

கருத்துரையிடுக