8 ஆக., 2010

பிரிட்டனில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும்: சாயீதா வார்சி

லண்டன்,ஆக8:பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எந்த வகையிலும் அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. எனவே இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார் முதல் முஸ்லிம் காபினட் அமைச்சரான சாயீதா வார்சி.

பர்தா முகத்தை மூடும் படியான ஆடையாக இருப்பதாலும் ஆண்கள் கட்டுப்படுத்துவதாலேயே இஸ்லாமிய பெண்கள் அதனை அணிகின்றனர் என கடந்த மாதம் பிரிட்டனில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து பிரிட்டனிலும் பொது இடங்களில் பர்தா அணிய தடை வரக் கூடும் என்ற சர்ச்சை நிலவி வந்தது. பின்னர் பிரிட்டன் அமைச்சர் டேமியன் கிரீன் பிரிட்டனில் பர்தா அணிய தடை விதிக்கப்படாது என அறிவித்ததன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆண்கள் கட்டாயத்தின் பேரில் மட்டும் பெண்கள் பர்தா அணிவதில்லை. பல இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகின்றனர். எனவே பர்தா அணிய தடை விதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைச்சர் ஒருவரே தற்போது நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்த விசயம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரிட்டனில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும்: சாயீதா வார்சி"

கருத்துரையிடுக