8 ஆக., 2010

முஸ்லிம்களுக்கு துணைத்திட்டம் தேவை: ஐக்கிய ஜனதாதளம்

புதுடெல்லி,ஆக8:ஆதிவாசி மக்களுக்கான துணைத்திட்டம் போல் முஸ்லிம்களுக்கும் துணைத்திட்டம் தேவை என ஐக்கிய ஜனதாதளம் சிபாரிசுச் செய்துள்ளது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டைச் சிபாரிசுச் செய்துள்ள ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதாதளத்தின் தேசிய செயற்குழு கோரியுள்ளது.

பீஹாரில் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலின் முன்னோடியாக
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூட்டணிக் கட்சியான பா.ஜ.கவை
வெறுப்படைய வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள 370-வது பிரிவுத் தொடர வேண்டும், அம்மாநிலத்திற்கு பூரண சுயாட்சி வழங்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதாதளக்கட்சியின் செயலாளர் கெ.சி.தியாகி வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்களுக்கு துணைத்திட்டம் தேவை: ஐக்கிய ஜனதாதளம்"

கருத்துரையிடுக