5 ஆக., 2010

அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்தில் குண்டுவைத்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கைது

புதுடெல்லி,ஆக5:2007-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திலிலுள்ள அஜ்மீர் தர்காவிலும், ஹைதராபாத்தில் மக்கா மஸ்ஜிதிலும் நடந்த குண்டுவெடிப்புகளில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் ராமச்சந்திர கல்சங்கராவை போலீஸ் கைதுச்செய்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து மூன்று நாட்கள் முன்பு இவரைக் கைது செய்ததாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தீப் டாங்கே என்ற பிரேமானந்துடன் இரண்டு இடங்களிலும் வெடிக்குண்டுகளை வைத்தது கல்சங்கரா என்பது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது. ஏற்கனவே கைதுச்செய்யப்பட்டிருந்த தேவேந்திர குப்தா குண்டு வைத்தது கல்சங்கராதான் என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

குப்தா கைது செய்யப்பட்டவுடன் டாங்கேயும்,கல்சங்கராவும் தலைமறைவாகினர். இவர்களை பிடித்துத் தருபவர்களுக்கு சி.பி.ஐ இரண்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் மற்றும் மக்கா மஸ்தில் குண்டுவைத்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி கைது"

கருத்துரையிடுக