5 ஆக., 2010

போபாலுக்கு பட்டை நாமம்! அமெரிக்காவுக்கு பாலபிஷேகம்!!

மெக்சிகோ வளைகுடாவில் பிரிட்டீஷ் பெட்ரோலியம் எனும் பன்னாட்டு நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறு கசிந்து அந்த வட்டாரமே எண்ணெயில் மிதக்கிறது. இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடு மீள்வதற்கே பல ஆண்டுகளாகும் என்று கூறப்படுகிறது. இதன் பொருட்டு அந்த நிறுவனம் அமெரிக்க அரசுக்கு 20 பில்லியன் டாலர் நட்ட ஈடு வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறதாம். இருக்கட்டும்.

போபாலில் அரசு கணக்குப்படி 3500 பேர்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விபத்திற்கு யூனியன் கார்பைடு நிறுவனம் கொடுக்க முன்வந்த நட்ட ஈடு வெறும் 470 மில்லியன் டாலர் மட்டுமே. எண்ணெய் கசிவுக்கு மட்டும் இதைப் போல இருபது மடங்கு அதிகம் தொகையை அமெரிக்கா வாங்கியிருக்கிறது.

அமெரிக்க கருணையின் இரட்டைவேடத்திற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா என்ன?
வினவு

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபாலுக்கு பட்டை நாமம்! அமெரிக்காவுக்கு பாலபிஷேகம்!!"

கருத்துரையிடுக