5 ஆக., 2010

கஷ்மீர்:ஓயாத கல்வீச்சு! தேயாத ரிக்கார்டு!!

ஆக,5:விலைவாசி உயர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தி வந்த அமளி சுமுகமாக முடிவுக்கு வர இருக்கிறது.கஷ்மீர்தான் அடங்க மறுக்கிறது. கடந்த சில நாட்களாக தினசரிகளின் முதல்பக்க செய்தி கஷ்மீர் பற்றித்தான். கஷ்மீர் மக்கள் வீசுகின்ற கற்கள் இமயத்துக்கு இணையான ஒரு மலையாக குவிந்து கொண்டிருக்கின்றன. இத்தனை நாள் அழுது அரற்றும் கஷ்மீர் பெண்களின் படங்களைத்தான் தினசரிகளில் பார்த்திருக்கிறோம். இப்போது பெண்கள் கல்லெறிகிறார்கள். முழக்கமிடுகிறார்கள். கையில் தடிக்கம்பு எடுக்கிறார்கள்.

இதை எப்படி விளக்குவது? தினமணி எப்படி விளக்குகிறது பாருங்கள்.

"பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, காஷ்மீர் மாநிலத்தில் கலவரத்தை தூடண்டி வருகிறது. ஐ.எஸ்.ஐ யின் கைப்பாவையாக செயல்படும் பிரிவினைவாதிகள் பல இடங்களில் போராட்டத்தை தூண்டி வருகின்றனர். போராட்டக்களத்தில் குழந்தைகளையும் பெண்களையும் முன்நிறுத்தி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.அப்பாவி மக்களுக்கு இடையே மறைந்திருந்து படை வீர்ரஃகளை நோக்கி துப்பாக்கியால் சுடுகின்றனர். இதனால் படைவீரர்களும் திருப்பி சுட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பொதுமக்களே கிளர்ச்சி செய்வது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதே அவரகள் திட்டம்" இது இன்றைய தினமணியின் முதல்பக்க செய்தி.

"நடைமுறையில் அரசின் அதிகாரம் என்பதே வீழ்ந்துவிட்டது. கஷ்மீர் போலீசார் ரோட்டில் விட்டு அடிக்கப்படுகின்றனர். அவர்களது ஆயுதங்கள் பிடுங்கப்படுகின்றன. வீடுகள் எரிக்கப்படுகின்றன. அனைத்திலும் துயரமானது என்னவென்றால், ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் இளைஞர்களைச் சுட்டுக் கொல்வது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் எவ்வளவு கடுமையான நடவடிக்கைகளாலும் போராட்டத்தில் முன்நிற்கும் இளைஞர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. கஷ்மீரின் இஸ்லாமியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி முதல் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் முகமது யூசுப் ஷா வரை யாருடைய வேண்டுகோளாலும் இந்த வன்முறைப் போராட்டப் பேரலையைத் தடுத்துநிறுத்த முடியவில்லை"
இது இந்து பத்திரிகையின் தலையங்கம்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத்தேவையில்லை.

மூன்றாவதாக இந்து பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதியின் நடுப்பக்க கட்டுரை என்ன சொல்கிறது? "டாக்டர்களும் எம்.பி.ஏ பட்டதாரிகளும் கூட வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். கஷ்மீரிகளும் இந்தியர்களே என்று சொல்லிக் கொண்டே, மொபைல் போன், இணையத் தொடர்பு போன்றவற்றில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சியிலிருந்து அவர்களை விலக்கி வைப்பதால்தான், தங்களை இந்தியர்களாக அவர்களால் உணர முடிவதில்லை" என்கிறார் மாலினி.

"பாகிஸ்தான் தூண்டுதல்தான் காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம்."
"இல்லையில்லை. வளர்ச்சித் திட்டம் போய்ச் சேராததுதான் இளைஞர்கள் வன்முறைப் பாதையை தேர்ந்தெடுக்க காரணம்"

இதை அடிக்கடி எங்கேயோ கேட்டமாதிரி இல்லை?"மாவோயிஸ்டு தூண்டுதல்தான் பழங்குடி மக்கள் ஆயுதமேந்தக் காரணம்", "இல்லையில்லை. பழங்குடி மக்களின் பொருளாதார வளர்ச்சியைப் புறக்கணித்த்துதான் அவர்கள் மாவோயிஸ்டுகளிடம் போய்ச்சேரக் காரணம்" என்ற அதே லாவணிக் கச்சேரி. அதே ராகம். வெவ்வேறு பாடல்கள்!

ஏம்பா இந்த ரிக்கார்டு தேயவே தேயாதா?
வினவு

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "கஷ்மீர்:ஓயாத கல்வீச்சு! தேயாத ரிக்கார்டு!!"

Mohamed Ameen சொன்னது…

As Abdullahs make merry, Kashmir burns, Dr Farooq Abdullah thinks that Kashmir is his Jagir, We in India have to act before forces land in Kashmir as UN may authorise foreign military intervention and it will be a big question mark whether our politicians will be able to prevent such forces because this is exactly what happened in Kosovo. if the UN can intervene in Kosovo it can intervene in Kashmir. The army bullets once again prove that we are interested only in the land of Kashmir and not in its people. The way forward is to sack the failed Govt of Omar Abdullah, set free all activists, withdraw the army except on the Paki borders, impose Governor Raj for six months and accept the autonomy proposal by the JK assembly during Farooq Abdullahs tenure in 2000, announce general amnesty and hold a fair election with none barred from contesting and accept Carter as an observer and let the real winner rule Kashmir not hand picked proxies like Omar Abdullah

கருத்துரையிடுக