12 ஆக., 2010

இஸ்ரேலால் லெபனான்,சிரியா தாக்கப்பட்டால் அவ்விரு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான் களமிறங்கும் - ஈரான் அமைச்சர்

டெஹ்ரான்,ஆக12:லெபனான்,சிரியா ஆகிய இரு நாடுகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டால், ஈரான் முழுமூச்சுடன் அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஈரானில் பயணம் மேற்கொண்டுள்ள லெபனான் வெளியுறவு அமைச்சர் அலி அல்-ஷாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மோட்டாகி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த மோதலை கண்டித்ததோடு, இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அதன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது என்று மொட்டாகி குறிப்பிட்டார்.

பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளில்,ஈரானும் லெபனானும் பொது நிலைப்பாடுகளை கொள்கின்றன.நியாயமான சர்வதேச உறவுகளை அமைப்பதை இரு தரப்பும் ஆதரிப்பதாகவும், அவர் வலியுறுத்தினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலால் லெபனான்,சிரியா தாக்கப்பட்டால் அவ்விரு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான் களமிறங்கும் - ஈரான் அமைச்சர்"

கருத்துரையிடுக