4 செப்., 2010

காவலர் கொலை:மாவோயிஸ்டுகள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் - மேதா பட்கர் மற்றும் சுவாமி அக்னிவேஷ்

கொல்கத்தா,செப்.4:பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட போலீஸ்காரரை மாவோயிஸ்டுகள் கொன்றது அவர்கள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் என சமூக ஆர்வலர்களான மேதா பட்கரும், சுவாமி அக்னிவேஷும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில்,பீகாரில் நிதீஷ்குமார் தலைமையிலான மாநில அரசு இப்பிரச்சனையைக் கையாண்டவிதம் கேள்விக்குரியது என
அவர்கள் தெரிவித்தனர்.

தேசத்தில் தீவிரவாதம் அதிகரிப்பதில் மத்திய-மாநில அரசுகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் ஒரேபோல் பொறுப்பாவர் என செய்தி நிறுவனங்களுக்கு பேட்டியளிக்கையில் மேதா பட்கர் தெரிவித்தார்.

கடந்த நான்கு தினங்களாக நிதீஷ்குமார் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மாவோயிஷ்டுகளின் கருணைக்காக விட்டுக்கொடுத்தார் என சுவாமி அக்னிவேஷ் தெரிவிக்கிறார்.

அரசிற்கு பேச்சுவார்த்தையில் ஆர்வமிருந்தால் ஏன் மாவோயிஸ்டுகளுக்கு பின்னால் பாதுகாப்பு படையை அனுப்பவேண்டும் என அவர் கேள்வியெழுப்பினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காவலர் கொலை:மாவோயிஸ்டுகள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் - மேதா பட்கர் மற்றும் சுவாமி அக்னிவேஷ்"

கருத்துரையிடுக