4 செப்., 2010

துபாயில் சரக்கு விமானம் தகர்ந்து வீழ்ந்தது

துபாய்,செப்.4 :துபாயில் சரக்கு விமானம் ஒன்று தகர்ந்து வீழ்ந்துள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பறந்து உயர்ந்த கார்கோ விமானம் 2 நிமிடத்திற்குள் எமிரேட்ஸ் சாலைக்கும் அல் அய்ன் சாலைக்குமிடையில் க்ளோபல் வில்லேஜிற்கு அருகில் தகர்ந்து வீழ்ந்தது.

ஒரு அமெரிக்க நிறுவனத்தின் யுனைட்டட் பார்ஸல் சர்வீஸ் விமானம்தான் தகர்ந்து வீழ்ந்துள்ளது. இரண்டு பணியாளர்கள் விமானத்திலிருந்ததாக கம்பெனி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெர்மனியில் கொலாகின் நகரத்திற்கு இவ்விமானம் புறப்பட்டுச் சென்றுக் கொண்டிருந்தது. முதலில் கிடைத்த தகவலின்படி எல்லா விமானப் பணியாளர்களும் கொல்லப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் அட்லாண்டை தலைமையகமாகக் கொண்டுச் செயல்படும் யு.பி.எஸ் என்றழைக்கப்படும் யுனைட்டட் பார்ஸல் ஸர்வீஸ் என்ற விமான நிறுவனம் 215 நாடுகளில் செயல்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாயில் சரக்கு விமானம் தகர்ந்து வீழ்ந்தது"

கருத்துரையிடுக