14 செப்., 2010

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனைப் படைத்தார் சுஷில் குமார்

மாஸ்கோ,செப்.14:உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதலாவது இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுஷில் குமார். நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ரஷ்யாவின் கோகேவ் ஆலனை வீழ்த்தினார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில், ஒலிம்பிக் வெண்கல நாயகன் சுஷில் குமார் கலந்து கொண்டார். நேற்று நடந்த 66 கி.கி., "பிரிஸ்டைல்' பிரிவின் பைனலில் சுஷில் குமார் மற்றும் ரஷ்ய வீரர் கோகேவ் ஆலன் மோதினர். துவக்கத்தில் இருந்தே 27 வயதான சுஷில் குமார் ஆதிக்கம் செலுத்தினார். இவரது கிடுக்கிப்பிடியில் சிக்கிய ஆலன் மீள முடியாமல் தவித்தார். இறுதியில் சுஷில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் சீனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதலாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். அரியானாவை சேர்ந்த சுஷில் குமார், கடந்த 2008ல் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக், மல்யுத்தத்தில்(66 கி.கி., "பிரிஸ்டைல்') வெண்கலம் வென்றார். தற்போது உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை தேடி தந்துள்ளார். அடுத்து டில்லியில் நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டிலும் சாதிக்க காத்திருக்கிறார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாற்று சாதனைப் படைத்தார் சுஷில் குமார்"

கருத்துரையிடுக