25 அக்., 2010

டெல்லி ஜும்மா மசூதி அருகில் தைவான் சுற்றுலா பயணிகளை சுட்டது யார்? திக்கு முக்காடும் போலீஸ்

டெல்லி,அக்.25:டெல்லியில் ஜும்மா மசூதி எதிரில் தைவான் நாட்டு சுற்றுலா பயணிகளை சுட்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து இதுவரை துப்புத் துலங்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. குற்றவாளிகளை போலீஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்தனர்.

எனினும், குற்றவாளிகள் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கு மேற்பட்டவர்களிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் இருந்து எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் டெல்லி போலீஸார் திக்குமுக்காடுகின்றனர்.

கடந்த செப்டம்பரில் தில்லியில் உள்ள ஜும்மா மசூதி அருகே தைவானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

காமன்வெல்த் போட்டிகள் துவங்கும் தருவாயில் இந்த சம்பவம் நடந்ததால் டெல்லியில் பதற்றம் ஏற்பட்டது. விளையாட்டு போட்டியின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டெல்லி ஜும்மா மசூதி அருகில் தைவான் சுற்றுலா பயணிகளை சுட்டது யார்? திக்கு முக்காடும் போலீஸ்"

கருத்துரையிடுக