3 நவ., 2010

குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் - சிட்டிசன்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்

மும்பை,நவ.3: 2002 குஜராத் கலவர வழக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் நீக்கியதை தீஸ்தா செதல்வாதின் சிட்டிசன்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் வரவேற்றுள்ளது.

இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவ்வமைப்பு, கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு தகுந்த நீதி கிடைக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளது. இக்கலவர வழக்குகளில் வெறும் 66 குற்றவாளிகளே ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருப்பதாக கூறும் அவ்வறிக்கை, மற்ற கைது செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கலவரத்திற்கு பிறகு ஒருசில மாதங்களில் மிக எளிதாக ஜாமீனில் வெளியே வந்துவிட்டதாக மேலும் கூறுகிறது.

இதில் அமைச்சர்களும், போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். உச்ச நீதிமன்றமே நியமித்த எஸ்.ஐ.டியின் விசாரணையில் பல குறைபாடுகளும், தோல்விகளும் காணப்படுவதாக கூறும் சிட்டிசன்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ், வழக்கின் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்வதற்கு முன் இவை அனைத்தும் சரி செய்யப்படும் என்று நம்புவதாகும் கூறியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் - சிட்டிசன்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ்"

கருத்துரையிடுக