6 நவ., 2010

பங்களாதேஷில் பாலியல் இம்சைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்

டாக்கா,நவ.6:பெண்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தி கேலிக்கு உட்படுத்தும் செயல்களுக்கு எதிராக நேற்று பங்களாதேஷ் தலைநகரில் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

பங்களாதேஷில் ஆண்களால் கேலிக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பாலியல் ரீதியான இம்சைப்படுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பங்களாதேஷில் பாலியல் இம்சைக்கு எதிராக பெண்கள் ஆர்ப்பாட்டம்"

கருத்துரையிடுக