21 நவ., 2010

கசாபிடம் விசாரிக்க என்.ஐ.ஏ விருப்பமா?

மும்பை,நவ.21:மும்பை தாக்குதலை தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜென்சி கசாபிடம் விசாரணை நடத்த விரும்புவதாக செய்திகள் வெளியானது.

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் கசாப் தாக்கல் செய்த மனுவில், 'மும்பை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதா? அப்படி வழங்கப்பட்டால் விசாரணை முடியும் வரை எனக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பி இருந்தான்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இது தொடர்பாக பதில் அளிக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கசாபின் மரண தண்டனையை உறுதி செய்யும் விசாரணை நடந்தபோது, அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் பதில் மனு தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், "கசாபிடம் வேறு ஒரு வழக்கில்தான் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி விரும்பியது. மும்பை தாக்குதல் வழக்கில் அல்ல. எனவே, கசாபுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பது என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.

இதையடுத்து, கசாபின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனினும் கசாபிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற தேசிய புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்க மாநில அரசு முடிவுசெய்யும் பட்சத்தில் உரிய சட்ட நடைமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கசாபிடம் விசாரிக்க என்.ஐ.ஏ விருப்பமா?"

கருத்துரையிடுக