29 நவ., 2010

ஈராக் விமானநிலையப் பணியாளரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது

பாக்தாத்,நவ.29:ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிச் சென்ற ஈராக் விமானநிலைய பணியாளரை அமெரிக்க ராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ளது.

தங்களை தாக்கவருகிறார் என தவறாக புரிந்துக் கொண்டதன் விளைவாகவே அவரை சுட்டதாக சமாதானம் கூறுகிறது அமெரிக்க ராணுவ வட்டாரம்.

பாக்தாத் சர்வதேச விமானநிலையத்தில் பணியாற்றும் கரீம் உபைத் பர்தான் என்பவர்தான் சுட்டுக் கொல்லப்பட்ட நபராவார். ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிவரும் பொழுது கரீம் ஹெட்லை போடுவது, வேகத்தை குறைப்பது போன்ற கட்டளைகளை கவனிக்காமலிருந்ததுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணம் என அமெரிக்க,ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் விமானநிலையப் பணியாளரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது"

கருத்துரையிடுக