லண்டன்,நவ.6:கண்பார்வையற்றோரின் கண்களுக்குள் (ரெட்டினா வுக்குள்) 3 மில்லி மீட்டர் விட்டமுடைய எலக்ரானிக் கருவி ஒன்றை இடுவதன் மூலம் கண்பார்வையற்றோர் பார்க்கலாம் என தற்போது நிரூபணமாகியுள்ளது.
பிரிட்டனில் இத்தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதல் முதலாக ஜெர்மனியில் பரிசோதனைக்கு பார்க்கப்பட்டுள்ளது. 3 மி.மி விட்டம் கொண்ட இச் சிறிய எலக்ரானிக் கருவி, சுமார் 1,500 ஒளிக் கீற்றுகளை உள்வாங்கி, அதனை பிம்பமாக மாற்றி மூளைக்குச் செல்லும் உணர்வு நரம்புகளுக்கு நேரடியாகச் செலுத்துகின்றன. இந்த அதீத கண்டுபிடிப்பால் பல பார்வையற்றோர் பயன்பெற இருக்கின்றனர்.
மனித குலமே வியக்கும் வண்ணம் இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக வியக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் கருவியைப் பொருத்திய நபர் ஒருவர் சில மணிநேரத்திலேயே, தனது பெயரை தானே வாசித்துக்காட்டி, சில பொருட்களையும் அடையாளம் காட்டியுள்ளார்.
பிரிட்டனில் இயங்கும் ஆக்ஸ்போர்ட் கண் மருத்துவமனை இது தொடர்பாக அதிக விபரங்களை வெளியிட்டுள்ளது.
பிரிட்டனில் இத்தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் முதல் முதலாக ஜெர்மனியில் பரிசோதனைக்கு பார்க்கப்பட்டுள்ளது. 3 மி.மி விட்டம் கொண்ட இச் சிறிய எலக்ரானிக் கருவி, சுமார் 1,500 ஒளிக் கீற்றுகளை உள்வாங்கி, அதனை பிம்பமாக மாற்றி மூளைக்குச் செல்லும் உணர்வு நரம்புகளுக்கு நேரடியாகச் செலுத்துகின்றன. இந்த அதீத கண்டுபிடிப்பால் பல பார்வையற்றோர் பயன்பெற இருக்கின்றனர்.
மனித குலமே வியக்கும் வண்ணம் இக் கண்டுபிடிப்பு அமைந்துள்ளதாக வியக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரானிக் கருவியைப் பொருத்திய நபர் ஒருவர் சில மணிநேரத்திலேயே, தனது பெயரை தானே வாசித்துக்காட்டி, சில பொருட்களையும் அடையாளம் காட்டியுள்ளார்.
பிரிட்டனில் இயங்கும் ஆக்ஸ்போர்ட் கண் மருத்துவமனை இது தொடர்பாக அதிக விபரங்களை வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்: on "கண்பார்வையற்றோர் பார்க்க புதிய எலக்ட்ரானிக் கருவி"
கருத்துரையிடுக