6 டிச., 2010

பாப்ரி மஸ்ஜித்:பாராளுமன்றத்தின் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா போராட்டம்

புதுடெல்லி,டிச.6:பாப்ரி மஸ்ஜித் இடித்த இடத்தில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. 'பாப்ரி மஸ்ஜித் நீதியைத் தேடுகிறது' என்ற முழக்கத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் இரண்டு மாதம் நீண்ட பிரச்சார நிகழ்ச்சியின் துவக்கமாக இது அமைந்தது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தர்ணாவில் கலந்துக் கொண்டு உரைநிகழ்த்திய தலைவர்கள், பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், இவ்வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தேசத்தின் மதசார்பற்ற தன்மைக்கு ஏற்பட்ட களங்கம் எனக் குறிப்பிட்டனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதுத் தொடர்பாக விசாரணைச் செய்த லிபர்ஹான் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்தாத மத்திய அரசின் போக்கையும் தலைவர்கள் கண்டித்தனர்.

உண்மைகளை புறக்கணித்துக் கொண்டு வெளியான தீர்ப்பு திருத்தப்படுவதற்காக தேசம் காத்திருக்கிறது என தர்ணாவை துவக்கிவைத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் கெ.எம்.ஷெரீஃப் தெரிவித்தார்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் பிரதிநிதி ஹாஃபிஸ் அன்ஸார், எஸ்.டி.பி.ஐ தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர், மாநில கண்வீனர் ராஷித் அக்வான், தேசிய துணைத் தலைவர் ஸாஜித் சித்தீகி, முஹம்மது ஷஹாப், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரா பிரதிநிதி டாக்டர்.அன்வாருல் இஸ்லாம், முஸ்லிம் பொலிடிகல் கவுன்சில் தலைவர் தஸ்லீம் ரஹ்மானி, முஸ்லிம் இஸ்லாஹி தஹ்ரீக் தலைவர் அப்துல் வஹ்ஹாப் கில்ஜி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:பாராளுமன்றத்தின் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய தர்ணா போராட்டம்"

கருத்துரையிடுக