16 ஜன., 2011

பாகிஸ்தானில் 20 நேட்டோ டாங்கர்களுக்கு தீவைப்பு

இஸ்லாமாபாத்,ஜன.16:தென்மேற்கு பாகிஸ்தானில் மர்ம நபர்கள் 20 நேட்டோ எண்ணெய் டாங்கர்களுக்கு தீவைத்துக் கொளுத்தினர்.

ஆப்கானில் அந்நிய ஆக்கிரமிப்பு படையினருக்கு எரிபொருளை கொண்டு சென்றவையாகும் இந்த டாங்கர்கள்.

பலூசிஸ்தானில் தேரா முராத் ஜமாலியில் ஒரு ரெஸ்ட்டாரெண்டில் உணவு சாப்பிட ஓட்டுநர்கள் சென்ற வேளையில் மர்மநபர்கள் ஆயுதங்களுடன் வந்து டாங்கர் லாரிகளுக்கு தீவைத்தனர். இச்சம்பவத்தில் எவருக்கும் ஆபத்தில்லை என செய்திகள் கூறுகின்றன.

ஆனால், அருகிலுள்ள இரண்டு கடைகள் சேதமடைந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். தாக்குதலின் பொறுப்பை எவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆப்கானில் நேட்டோ படையினருக்கு தேவையான எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கராச்சி துறைமுகத்திற்கு கொண்டுவந்த பிறகு சாலை வழியாக ஆப்கானுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

நேட்டோ வாகனங்கள் மீது முன்பு தாலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தி தீக்கிரையாக்கியுள்ளனர். பாதுகாப்பு காரியங்கள் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃபலி சர்தாரி அமெரிக்காவில் வாஷிங்டனில் வைத்து அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவுடன் சந்திப்பு நடத்த சென்ற வேளையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் 20 நேட்டோ டாங்கர்களுக்கு தீவைப்பு"

கருத்துரையிடுக