ராமநாதபுரம்,ஜன.21:தமிழக அரசு சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்பதிவு 19/01/2011 முதல் 24/01/2011 வரை அனைத்து மாவட்ட ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டதாரிகள் பலர் பங்குபெற்றனர். இவ்வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்பதிவு நடைபெறும் இடங்களான இராமநாதபுரம், திருவாடனை, திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, நயினார்கோயில், போகலூர், கடலாடி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேலைவாய்ப்பு முகாமுக்கான நேர்முக தேர்வு வருகின்ற 28/01/2011 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியற் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாமுக்கான நேர்முக தேர்வு வருகின்ற 28/01/2011 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியற் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
தூது நிரூபர்.இராம்நாட்
0 கருத்துகள்: on "இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்"
கருத்துரையிடுக