20 பிப்., 2011

ஆஃப்கான்:ராணுவமுகாமில் நடந்த தாக்குதலில் 3 ஜெர்மனிய ராணுவ வீரர்கள் பலி

காபூல்,பிப்.20:ஆப்கானிஸ்தானின் பக்லன் பிராந்தியத்தில் உள்ள ஓ.பி நார்த் முகாமில் ஜெர்மனி வீரர்களும், ஆப்கானிஸ்தான் வீரர்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் ராணுவ உடையில் வந்த ஒரு நபர் கை துப்பாக்கியால் முகாமிலுள்ளவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபரின் மீது ராணுவ வீரர் தாக்குதல் நடத்திய போது அந்நபர் காயமடைந்ததார். இதில் மூவர் கொல்லப்பட்டனர்.

மேலும் காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் குட்டன்பெர்க் இந்த முகாமுக்கு வந்து சென்ற மறுநாள் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்த முகாமானது மிகவும் அபாயகரமானது. மொத்தம் 500 வீரர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இந்த முகாமில் 5 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கான்:ராணுவமுகாமில் நடந்த தாக்குதலில் 3 ஜெர்மனிய ராணுவ வீரர்கள் பலி"

கருத்துரையிடுக