2 பிப்., 2011

ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமாச் செய்ய 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை

கெய்ரோ,பிப்.2:போராட்டம் உக்கிரம் அடையும் முன்பு உடனடியாக ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமென எகிப்து நாட்டைச் சார்ந்த 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நீதிபீடத்தின் கண்காணிப்பில் பாராளுமன்ற அதிபர் தேர்தல்களை நடத்தவேண்டுமென கெய்ரோ இன்ஸ்ட்யூட் ஆஃப் ஹியூமன் ரைட் ஸ்டடீஸ், செண்டர் ஃபார் எக்ணாமிக்ஸ் அண்ட் சோசியல் ரைட், அரப் செண்டர் ஃபார் இண்டிபெண்டண்ட்ஸ் ஆஃப் ஜுடிஸியரி உள்பட முக்கிய மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

புதிய அரசியல் சட்டம் உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உட்படும் கமிஷனை உருவாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹுஸ்னி முபாரக்கின் ராஜினாமாச் செய்ய 50 மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை"

கருத்துரையிடுக