7 பிப்., 2011

சங்க்பரிவா​ர் மற்றும் காங்கிரஸின் போராட்டத்தால் விடுதலைச் செய்யப்பட்ட 'சிமி' உறுப்பினர்​கள் மீண்டும் கைது

புதுடெல்லி,பிப்.7:குடியரசு தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்ட 5 'சிமி' இயக்க உறுப்பினர்களை வி.ஹெச்.பி-யின் போராட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கைதுச் செய்துள்ளது மத்தியபிரதேச மாநில போலீஸ்.

33 மாத சிறைவாசத்திற்கு பிறகு இவர்களை விடுதலைச் செய்ய சிபாரிசுச் செய்த சிறைத்துறையின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சிறை துணை சூப்பிரண்ட் ஆகியோருக்கெதிராக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் கைதுச் செய்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் சவ்ராடியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் காவி முகம்
'சிமி' உறுப்பினர்கள் விடுதலைச் செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய பிரதேச மாநில விசுவஹிந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் போராட்டம் நடத்தின. ஆனால், மதசார்பற்ற வேடம் புனையும் காங்கிரஸ் கட்சியும் 'சிமி' உறுப்பினர்களின் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தியது அக்கட்சியின் போலி மதசார்பற்ற வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சங்க்பரிவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு உஜ்ஜயினில் வைத்து போலீசார் கைதுச் செய்தனர்.

தேசவிரோத இலக்கியங்களை கைவசம் வைத்திருந்ததாகவும், ரகசியக் கூட்டம் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டி 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஜாதில் பர்வஜ், அயாஸ் ரியாஸ் அஹ்மத், அக்பர் அஃப்ஸல் கான், மெஹ்ருத்தீன் ஷேக், இர்ஷாத் அலி ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர். ஐந்து வருட சிறைத்தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் வி.ஹெச்.பி உறுப்பினரான பாலகிருஷ்ண கேதார், ஸோனு ஷேக்வாத் ஆகியோர்தான் அரசுதரப்பின் முக்கிய சாட்சிகள். விசாரணையின் போது எதிர்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு பதிலளித்த முக்கிய சாட்சிகளில் ஒருவரான பாலகிருஷ்ண கேதார் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்குவது தொடர்பான கூட்டத்தை 'சிமி' உறுப்பினர்கள் நடத்தியதை தான் காணவில்லை என தெரிவித்தார். ஆனாலும், நீதிமன்றம் 'சிமி' உறுப்பினர்களுக்கு அநியாயமாக தண்டனை வழங்கியது.

சிறை வாழ்க்கையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தின்போது கைதிகளை விடுதலைச் செய்வது வழக்கமாகும். அதனடிப்படையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதற்கெதிராகத்தான் வி.ஹெச்.பி உள்பட சங்க்பரிவார பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றுகோடி ரூபாய் பணத்தை சிறைத்துறை அமைச்சர் உள்பட பல லஞ்சமாக பெற்றுக்கொண்டு 'சிமி' உறுப்பினர்களை விடுதலைச் செய்ததாக போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜையின் கச்சோட் சப்-ஜெயில் துணை ஜெயிலர் சஞ்சீவ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறைத்துறை பொறுப்பை வகிக்கும் முதன்மை செயலாளர் சுதேஷ்குமார், சிறை டி.ஜி.பி வி.கெ.பவார் ஆகியோரை அத்துறைச் சார்ந்த பொறுப்பிலிருந்து மாற்றியது மத்தியபிரதேச பா.ஜ.க அரசு.

இதற்கிடையே, தேசத்துரோக குற்றம் சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரை பணம் வாங்கிவிட்டு விடுதலைச் செய்ததாக குற்றஞ்சாட்டை எழுப்பி, இச்சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், சிறைத்துறை அமைச்சர் ஜகதீஷ் தேவரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டுமென மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும் சதி இதில் நடந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கெ.கெ.மிஷ்ரா கூறுகிறார். இச்சம்பவத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிபாரிசுச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டு அதிகாரிகளின் மீது குற்றத்தை சுமத்தியதிலிருந்து அரசின் இரட்டை வேடம் தெளிவானதாக அவர் கூறுகிறார்.

அப்பாவிகளை விடுதலைச் செய்ததற்காக கூப்பாடு போடும் காங்கிரஸ்தான் மத்தியிலும் ஆட்சி செய்கிறது. ஆனால், நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் வெட்ட வெளிச்சமான போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது அக்கட்சி தலைமையிலான அரசு.

நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சங்க்பரிவா​ர் மற்றும் காங்கிரஸின் போராட்டத்தால் விடுதலைச் செய்யப்பட்ட 'சிமி' உறுப்பினர்​கள் மீண்டும் கைது"

கருத்துரையிடுக