26 பிப்., 2011

புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது

பாக்தாத்,பிப்.26:முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்ததற்காக சிறைத் தண்டனையை அனுபவித்த முன்ததிர் பாக்தாதில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் வேளையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பாக்தாதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்திருந்தார் முன்ததிர்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வேளையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைத்து புஷ்ஷின் மீது ஆவேசத்துடன் ஷூவை வீசியெறிந்த முன்தழிரின் துணிச்சல் ஏகாதிபத்திய அமெரிக்காவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக முஸ்லிம்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் அவரைப் பாராட்டினர்.

ஷூ எறிந்த சம்பவத்திற்கு பிறகு முன்ததிர் பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு சமூகப் பிரச்சனைகளில் பங்கேற்று வருகிறார்.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புஷ் மீது ஷூ வீசிய முன்ததிர் மீண்டும் கைது"

கருத்துரையிடுக