12 பிப்., 2011

முஷாரஃபிற்கு பிடிவாரண்ட்

இஸ்லாமாபாத்,பிப்.12:பெனாசிர் பூட்டோ கொலைவழக்கில் தொடர்புடையவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபிற்கு ஜாமீன் இல்லாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது. ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி சமர்ப்பித்த விரிவான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என முஷாரஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. 2007-ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியின் போது பெனாசிர் கொல்லப்பட்டார். 2009-ஆம் ஆண்டுட் முதல் முஷாரஃப் பிரிட்டனில் வசித்துவருகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஷாரஃபிற்கு பிடிவாரண்ட்"

கருத்துரையிடுக