7 பிப்., 2011

மலேகான்:பிரக்யாசிங், புரோகித்திடம் சி.பி.ஐ விசாரணை

மலேகான்/மும்பை,பிப்.7:கடந்த 2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பிரக்யாசிங் தாக்கூர், லெஃப்டினண்ட் கர்னல் புரோகித், பிரவீண் முத்தலிக் ஆகியோரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியவர்கள்தான் இவர்கள். 2006 மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் என அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இவர்களுடன் ராகேஷ் டாவ்தே, அஜய் ரஹிர்கர், ஸ்ரீநாராயணன் கல்சங்கரா, சியாம்ஸாஹு, முன்னாள் ராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாய, சமீர் குல்கர்னி, ஜகதீஷ் மாந்த்ரா, தயானந்த் பாண்டே, சுதாகர் சதுர்வேதி ஆகியோரையும் சி.பி.ஐ விசாரிக்க உள்ளது. இவர்கள் 2008 மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளாவர்.

சி.பி.ஐ இயக்குநர் கந்தசாமியின் தலைமையிலான சி.பி.ஐ குழு தற்பொழுது மலேகானில் முகாமிட்டுள்ளது. ஏ.டி.எஸ் சேகரித்த ஃபாரன்சிக் ஆதாரங்களை சி.பி.ஐ பரிசோதிக்கும். முதலில் இவ்வழக்கை விசாரித்த விசாரணைக் குழுவின் போலீஸ் அதிகாரிகளையும் சி.பி.ஐ விசாரிக்கும் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹராஷ்ட்ரா ஒருங்கமைவு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் படி 2008 ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஒன்பது ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஜாமீன் மனுமீதான விசாரணை இன்று MCOCA நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மலேகான்:பிரக்யாசிங், புரோகித்திடம் சி.பி.ஐ விசாரணை"

கருத்துரையிடுக