6 பிப்., 2011

ரஷ்ய விமானநிலையத்தில் குண்டு வைத்தது யாரென அடையாளம் தெரிந்தது - புடின்

மாஸ்கோ,பிப்.6:ரஷ்ய தலைநகர் மாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தற்கொலை படையை சேர்ந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் டொமொடிடோவோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் 24 ம் தேதி குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 35 பேர் பலியாயினர். 180 பேர் காயமடைந்தனர். விமான நிலையத்தில் குண்டு வைத்த இருவரில், ஒருவர் ஆண் என அடையாளம் கண்டுபிடித்துள்ளதாகவும், விசாரணை தீவிரமாக நடந்து வருவதால் அவரை பற்றிய விவரத்தை வெளியிட முடியாது எனவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பிரதமர் விளாடிமிர் புடின் குறிப்பிடுகையில், "தங்கள் கோரிக்கை என்ன என்பது தெரியாமலேயே பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். விமான நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்த வழக்கு விரைவில் தீர்க்கப்படும்" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ரஷ்ய விமானநிலையத்தில் குண்டு வைத்தது யாரென அடையாளம் தெரிந்தது - புடின்"

கருத்துரையிடுக