6 பிப்., 2011

கஷ்மீர் குறித்த ஆவணப் படத்திற்கு இந்திய சென்சாரில் போராட்டம்

பிப்.6:அஷ்வின் குமார் இயக்கிய கால்பந்து விளையாட்டு பற்றிய இந்திய ஆவணப் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் போராட்டம் நடந்து வருகிறது.

கஷ்மீரில் பிறந்த பாஷ்ராத் என்கிற திறமையான கால்பந்து வீரர், பிரேசிலில் கால்பந்து பயிற்சி எடுக்க முயற்சி செய்யும் போது தான் கஷ்மீரி என்பதால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லும் படம்.

இந்த இயக்குனர் இதற்கு முன் இயக்கிய 'லிட்டில் டெரரிஸ்ட்' என்கிற குறும்படம் 2004 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் ரோடு டு லடாக்(2003), தெ பாரெஸ்ட்(2008), டேஸ்டு இன் டூன் (2010) போன்ற படங்களை இயக்கியவர். ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்பட்ட இவரது 'லிட்டில் டெரரிஸ்ட்' உலகெங்கும் நூற்றி மூன்று திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்போது இவர் இயக்கி இருக்கும் 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' (Inshaallah football) என்று பெயரிடப்படுள்ள இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற புசான் சர்வதேசிய திரைப்பட விழா' (Pusan International Film Festival) மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற 'துபாய் சர்வதேச திரைப்பட விழா' (Dubai International Film Festival) ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது.

ஆனால் இந்தியாவில் வெளியிட இந்திய சென்சார் போர்டை அனுகியபோது முதலில் இந்த படத்தை தடை செய்ததாகவும் அதன் பின் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தின் இயக்குனர் அஷ்வின் குமார் டிசம்பர் 23, 2010 அன்று தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த படத்தை இந்திய சென்சார் போர்டு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இருந்தும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை மறுத்து ஷர்மிளா தாகூர் மறுநாள் 'தி ஹிந்து' நாளிதழில் பேட்டி அளித்து இருந்தார். இரு முறை நிராகரிக்கப்பட்டு பிறகு இந்த படத்திற்கு இறுதியில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படமான 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' படத்தில் சித்தரவதை செய்வதை விவரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்று 'அவுட்லுக்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பத்தை மறுத்து இந்திய சென்சார் போர்டிற்கு பெரிய நெடிய கடிதம் ஒன்றை இயக்குனர் அஷ்வின் எழுதி 'ஃபேஸ்புக்' மூலம் வெளியிட்டு இருந்தார். அதில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள், தொலைக்காட்சி சானல்கள், டி.டி.ஹெட்ச் போன்றவற்றால் நிராகரிக்கப்படுவதை குறிப்பிட்டு மறுபரிசீலனை செய்து 'U/A' சான்றிதழ் வழங்க முயற்சித்து இருந்தார்.

டெஹல்கா இதழ் பேட்டியின் போது இதை ஷர்மிளா தாகூரிடம் கேட்ட போது அந்த காட்சி நீக்கப்பட்டால் அந்த படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதற்கு அஷ்வின் குமார் "இது கற்பனை கதை அல்ல, கஷ்மீரிகளின் வாழ்கையில் தினமும் நடக்கும் உண்மை கதையை உலகம் அறிவதற்காகவே எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source:ஊடகம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கஷ்மீர் குறித்த ஆவணப் படத்திற்கு இந்திய சென்சாரில் போராட்டம்"

கருத்துரையிடுக