2 பிப்., 2011

எகிப்து போராட்டம்: அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை - மத்திய அரசு

புதுடெல்லி,பிப்:எகிப்து நாட்டில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக உக்கிரமடைந்துள்ள மக்கள் திரள் போராட்டத்தைக் குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்பிரச்சனை எகிப்தின் உள்நாட்டு பிரச்சனை என தெரிவித்தார்.

மேலும் இதுக்குறித்து அவர் கூறியதாவது: 'எகிப்தின் நெருக்கடிக்கு பரிகாரம் காண போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் அங்கீகரிக்கும் தீர்வை எகிப்து அரசு முன்வைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். எகிப்திலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பி வர விரும்பும் இந்தியர்களுக்கு தேவையான வசதிகளை அரசு ஏற்பாடுச் செய்யும். கெய்ரோவில் இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுடன் தொடர்புக்கொண்டு வருகிறது.

எகிப்தில் இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியமாகும். கெய்ரோ இந்திய தூதர் சுவாமிநாதனுடன் நான் அடிக்கடி தொடர்புக்கொண்டு வருகிறேன்.' இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து போராட்டம்: அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை - மத்திய அரசு"

கருத்துரையிடுக