புதுடெல்லி,ஜன:சிறுபான்மையினர், அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினர், ஆதிவாசிகள், பெண்கள், முதியோர் ஆகியோர் தொடர்பான பிரச்சனைகளை போலீசார் எளிமையாகவும், விரைவாகவும் தீர்வுக்காண வேண்டுமென பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
ஆதிவாசிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக இந்தியாவில் தற்போதும் தொடரும் அத்துமீறல்கள் நம்மையெல்லாம் வெட்கமடையச் செய்வதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க மத்திய அரசு அழைப்புவிடுத்த கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர். இடதுசாரி தீவிரவாதம் தற்பொழுது இந்தியாவின் முக்கிய கவலையாக மாறியுள்ளது.
சட்டீஷ்கர், பீகார், மேற்குவங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அக்கிரமங்கள் கவலையை ஏற்படுத்துகிறது. இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக போராட மாநிலங்களும், மத்திய படைக்குமிடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக 60 பிற்படுத்தப்பட்ட மாவட்டங்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
ஆதிவாசிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக இந்தியாவில் தற்போதும் தொடரும் அத்துமீறல்கள் நம்மையெல்லாம் வெட்கமடையச் செய்வதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க மத்திய அரசு அழைப்புவிடுத்த கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர். இடதுசாரி தீவிரவாதம் தற்பொழுது இந்தியாவின் முக்கிய கவலையாக மாறியுள்ளது.
சட்டீஷ்கர், பீகார், மேற்குவங்காளம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் அக்கிரமங்கள் கவலையை ஏற்படுத்துகிறது. இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக போராட மாநிலங்களும், மத்திய படைக்குமிடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை. நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் வளர்ச்சிக்காக 60 பிற்படுத்தப்பட்ட மாவட்டங்கள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மன்மோகன்சிங் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிறுபான்மையினர் தொடர்பான வழக்குகளில் விரைவாக"
கருத்துரையிடுக