14 மார்., 2011

ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை

மெல்பர்ன்,மார்ச்.13:ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவியொருவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடல் கடந்த வாரம் சிட்னியில் ஒரு கால்வாயில் சூட்கேஸிற்குள் வைத்து கண்டெடுக்கப்பட்டது. மெடோ வங்கிக்கு அருகில் சூட்கேஸை கண்ட கட்டிடத் தொழிலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இக்கொலைத் தொடர்பாக தோஷாவின் அயல்வாசி ஸ்டானி ரெஜினால்ட் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் மீது கொலை மற்றும் வன்புணர்வு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.

ஸ்டானி ரெஜினால்டின் முன் ஜாமீன் கோரும் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கொல்லப்பட்ட 24 வயதான தோஷா தாக்கர் சிட்னி காலேஜ் ஆஃப் பிஸினஸ் அண்ட் ஐ.டியில் கணக்கியல் துறை மாணவியாவார். இவரது கொலைக்கான பின்னணி தெரியவில்லை.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை"

கருத்துரையிடுக