10 மார்., 2011

யெமன்:அதிபருக்கு எதிராக சிறையில் போராட்டம்

ஸன்ஆ,மார்ச்.10:ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ராஜினாமாவைக் கோரி யெமன் சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தினர்.

ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக போராட்டம் நடத்தும் மக்களுக்கு சிறைக்கைதிகள் ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் நடத்திய சிறைக் கைதிகளை நோக்கி போலீஸ் துப்பாக்கியால் சுட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.

ஸன்ஆ சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். சிறை அதிகாரிகளின் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சிறைக் காவலர்கள் தாக்குதலிலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமன்:அதிபருக்கு எதிராக சிறையில் போராட்டம்"

கருத்துரையிடுக