7 மார்., 2011

பாப்ரி மஸ்ஜித்:தினமும் வாதம் கேட்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய பாப்ரி மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டி கோரிக்கை

லக்னோ,மார்ச்.7:பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் விசாரணையை விரைவாக முடிக்க தினமும் வாதம் கேட்கக்கோரி அலகபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டுமென பாப்ரி மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டி சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முஷ்தாக் சித்தீக்கியின் தலைமையில் கூடிய கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக்குறித்தும் விவாதித்ததாக சித்தீகி தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்:தினமும் வாதம் கேட்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய பாப்ரி மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டி கோரிக்கை"

கருத்துரையிடுக