7 மார்., 2011

யெமனில் நான்கு ராணுவத்தினர் பலி

ஸன்ஆ,மார்ச்.7:கிழக்கு மாகாணமான மஆரிபில் நான்கு யெமன் நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ராணுவ வாகனத்தின் மீது நடந்த தாக்குதலில் குடியரசுப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் பின்னணியில் அல்காயிதா போராளிகள் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

கடந்த வாரம் இப்பிராந்தியத்தில் நடந்த தாக்குதலில் மூன்று ராணுவத்தினர் உள்பட ஐந்துபேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே தங்கள் நாட்டு குடிமக்கள் யெமனுக்கு செல்லக்கூடாது என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. பிரிட்டனும், தங்களது குடிமக்களுக்கு யெமனுக்கு செல்ல பயணக் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "யெமனில் நான்கு ராணுவத்தினர் பலி"

கருத்துரையிடுக