24 நவ., 2009

துல் ஹஜ் முதல் பத்தின் சிறப்புக்கள்

புனித ரமழான் எம்மை கடந்து சென்றது. ரமழானை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதில் நாம் பல குறைகள் விட்டிருந்தோம். அதனை எண்ணி வேதனை அடைகின்றோம்.
ஆனால், கருணை மிக்க அல்லாஹ் தொடரான சந்தர்ப்பங்களை எமக்காக உருவாக்கித் தந்திருக்கிறான். இவற்றுள் ஒன்றுதான் நாம் சந்திக்க விருக்கும் துல்ஹஜ் மாத ஆரம்பப் பத்து நாட்களாகும். இந்த நாட்களின் சிறப்புக்களையும் இவற்றினை எவ்வாறு எமக்கும் எமது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளலாம் என்பதனையும் இங்கு நோக்குவோம்.

துல் ஹஜ் முதன் பத்தின் சிறப்புக்கள்

1. அல்லாஹ் சத்தியம் பண்ணு கின்ற நாட்கள் : ஸூறதுல் பஜ்ரில் (அதிகாலை யின் மீதும் பத்து நாட்களின் இரவுகள் மீதும் சத்தியமாக) என வருவது அவற்றின் மகத்துவத்தினைக் காட்டும்.

2. அல்லாஹ்வின் பெயர்உச்சரிக் கப்படும் நாட்கள்ஸூறதுல் ஹஜ்ஜில் (கால்நடைகளை அருளியமைக்காக அல்லாஹ் வின் பெயரை நினைவுகூறிக் கொண்டு "குறிப்பிட்ட நாட்கள்" வருவார்கள்) இது மேற்படி பத்து நாட்களை குறிப்பிட்டே வருகிறது என இப்னு உமர் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் கருதுகின்றனர்.

3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் பத்து நாட்களில் வணக்க வழிபாடு களில் ஈடுபடுவது எனக்கு மிகவும் விருப்பத்துக்குரியதாகும். அந்நாளில் ஒரு நாள் நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்பதற்குச் சமமானது. ஒரு இரவு நின்று வணங்குவது (கியாமுல் லைல்) லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குவதற்கு ஈடானது. (திர்மிதி)இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் ‘அல்லாஹு அக்பர்’ ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ போன்ற திக்ரு களில் அதிகமாக ஈடுபடல், அத்தினங்களில் ஒருநாள் நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்பதற்குச் சமமானது. அத்தினங்களில் செய்கின்ற நற் காரியங்களுக்கு 700 மடங்கு நன்மை வழங்கப்படுகின்றது."

4.அறபா தினம் ஹஜ் கிரியைகளின் அதிவிஷேட தினம் அறபாவாகும்அன்று பாவங்கள் மன் னிக்கப்படும். நரக விடுதலை வழங்கப்படும். ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக் கிறார்கள்: அறபா தினத்தில் (பிறை 9) நரகவாசிகளுக்கு விடுதலை அளிக்கப்படுவதுபோல வேறு எத்தினத்திலும் விடுதலை அளிக்கப்படுவதில்லை. உல கில் மிகச் சிறந்த நாட்கள் துல்ஹஜ் முதல் பத்து நாட்களாகும்.

5.அறுத்து பலியிடும் உழ்ஹிய்யா தினங்கள்சில அறிஞர்கள், இது வருடத்தில் சிறந்த தினம் என்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் லாஹ்விடத்தில் மகத்தான தினம் உயிர் பலி கொடுக்கும் தினமாகும்... (ஸஹீஹ் அல்பானி)

6.அடிப்படையான இபாதத்துகள் இங்கு ஒன்றுபட்டு வருகின்றன.இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: துல்ஹஜ் முதல் பத்து விஷேடம் பெறுவதற்கான காரணம், அத்தினங்களில் தலையாய இபாதத்க ளான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய நான் கும் ஒன்றுபடுவதாகும். இத்தினங்கள் வந்துவிட்டால், ஸஈத் பின் ஸுபைர் (ரழி) அவர்கள் மிகவும் கடு மையாக நிறைய நல்லமல்களில் ஈடுபடுவார்கள். (தாரமி)

7. நல்லமல்கள் செய்வதற்கு அல் லாஹ்வுக்கு மிக விருப்பமான தினங்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள் "நல்லமல்கள் செய்கின்ற நாட்களிலேயே அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாட்கள் இந்த நாட்களாகும். அப்போது ஸஹாபாக்கள், அல் லாஹ்வின் தூதரே அல்லாஹ்வின் பாதையில் போராடுவது எப்படி என்று கேட்க, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிட இதுவே சிறப்புக்குரி யது. ஆனால், ஒருவர் தனது உயிரையும் பொருளையும் வைத்துப் போராடி மரணிக்கின்றார் எனில், அவர் நிலை வேறு" என பதிலளித்தார்கள்.

இந்த நாட்களில் செய்யக்கூடிய சிறப்பான நற்செயல்கள்

1. ஹஜ், உம்ரா கிரியைகள்: ஒரு உம்ரா அதற்கு முந்திய உம்ராவுக்கு இடைப் பட்ட காலத்திற்குரிய குற்றப் பரிகாரமாகும். அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜுக் கான கூலி சுவனத்தை தவிர, வேறு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (முத்தபகுன் அலைஹி)

2.அறபா தினத்தில் நோற்கும் நோன்பினால் அல்லாஹ் அதற்கு முந்திய வருடத்திற்கும் பிந்திய வருடத்திற்குமான குற்றப்பரிகாரமாக அதனை ஆக்கு கின்றான். (முஸ்லிம்)பத்து நாட்களுக்கான நோன்பு மிகவுமே விரும்பத்தக்கது என்கிறார் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்.

3.பர்ளான, ஸுன்னத்தான தொழு கைகளை உரிய நேரத்தில் தொழுதல்.4. அல்லாஹு அக்பர், அல்ஹம் துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் முதலிய திக்ருகளை அதிகமாக கூறுதல். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல்லாஹ்விடம் மகத்துவம் நன்மை செய்வதில் அவனுக்கு அதிக விருப்ப முடைய நாட்கள் இந்த பத்து நாட் களை விட வேறில்லை. ஆகவே, இதில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல் லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் முதலியவற்றை அதிமாகச் சொல்லிக் கொள்ளுங்கள். (அஹ்மத்)

5.இத்தினங்களில் ‘ஸதகா’ கொடுப்பது மிக சிறந்ததாகும்.

6.பெருநாள் தொழுகைக்காக தூய்மையான ஆடைகளை அணிந்து நேர காலத் துடன் தொழும் இடத்திற்குச் சமூகமளித்தல்.

7.உழ்ஹிய்யா கொடுத்தல்: இது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாஹ் எனவும் வசதியுள்ளவர்களுக்கு கட்டாயக் கடமை என்றும் பெரும்பாலான அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், வசதியிருந்தும் யார் உழ்ஹிய்யா கொடுக்க வில்லையோ அவர் நாம் தொழுகின்ற இடத்தினை நெருங்கவே கூடாது. (அஹ்மத், இப்னு மாஜா)

source:meelparvai.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துல் ஹஜ் முதல் பத்தின் சிறப்புக்கள்"

கருத்துரையிடுக