
தெஹ்ரானில் இமாம் ஸாதிக் பல்கலைக்கழகத்தில் மாணவர்களை பாராட்டி ஆற்றிய உரையில் அவர் இதனைத்தெரிவித்தார்.
ஈராக், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளின் வரிசையில் நான்காவதாக யமன் நாடுதான் அமெரிக்காவின் லட்சியம். இதற்கு ஆதரவுத்தேடுவதற்காக அல்காயிதா, பயங்கரவாதம் என்ற பிரச்சாரத்தை செய்துவருகிறது அமெரிக்கா.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், பிரிட்டன் பிரதமர் பிரவுனும் சோமாலியாவிலும், எமனிலும் பயங்கரவாதத்திற்கு(?) எதிரான போராட்டத்திற்கு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தனர். மேலும் தீவிரவாதத்தை எதிர்க்கொள்ள எமன் அரசுக்கு சிறப்பு போலீஸ் பிரிவினை உருவாக்குவதற்கு பொருளாதார உதவிச் செய்யவும் அமெரிக்கா முடிவெடுத்திருந்தது. தற்ப்பொழுது தீவிரவாதிகளுக்கெதிரான போர் என்றபெயரில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவும் களத்தில் உள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கும் பொழுது அந்நாட்டில் போதைமருந்து உற்பத்தியும், தீவிரவாதமும் இருப்பதாக அமெரிக்கா கூறியிருந்ததை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் ஆப்கானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு போதைமருந்து உற்பத்தி அதிகரித்தது மேலும் அந்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலும் அதிகமாக உள்ளது. இவ்வாறு மனுஷஹர் முத்தகி உரையாற்றினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "யமன் நாட்டை மற்றொரு ஆப்கானிஸ்தானாக மாற்ற அமெரிக்கா முயற்சி: ஈரான்"
கருத்துரையிடுக