ரியாத்:மரண தண்டனை செயல்படுத்துவதற்கான சட்டத்திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்ய சவூதி அரேபியா ஷுரா கவுன்சில் முடிவெடுத்துள்ளது.
மரண தண்டனையை செயல்படுத்துவதில் நீதிபதிகளின் ஒட்டுமொத்த கருத்து தேவை என்பதுதான் சட்டதத் திருத்தம். தற்ப்போது கிரிமினல் சட்டப்படி பெரும்பான்மையான நீதிபதிகள் அங்கீகரித்தால் தண்டனை நிறைவேற்றப்படும். ஷூரா உறுப்பினர்களில் ஒரு சிலரே இந்தத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கீழ் நீதிமன்றங்கள் மரணத்தண்டனை, கை வெட்டுதல் அல்லது அதற்கு சமமான தண்டனைகளை தீர்ப்பளித்தால் சுப்ரீம் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதனை ஒப்புக்கொள்ளவேண்டும், அல்லாமல் தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்றும் சட்டத் திருத்தப் பிரிவுகளில் கூறப்படுகிறது.
நீதி மன்றத்தின் தீர்மானம் ஒட்டுமொத்தமானதாக இருக்கவேண்டும். இஸ்லாமிய, சட்ட, மனித உரிமை துணை கமிட்டிகளின் கருத்துக்களையும் பெற்ற பிறகு இந்த சட்டத்திருத்தத்தில் இறுதி முடிவெடுக்கப்படும்.
அதேவேளையில், தண்டனைச் சட்டத்தில் ஒட்டுமொத்த நீதிபதிகளின் ஆதரவும் தேவை என்பது பல கொலைக்காரர்களையும் தண்டனையிலிருந்து தப்புவதற்கு உதவும் என சட்டத்திருத்தத்தை எதிர்த்த ஷூரா உறுப்பினர் டாக்டர்.சுஹைர் அல் ஹாரிஸி கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சவூதி அரேபியா மரண தண்டனைச் சட்டத்தில் திருத்தம்"
கருத்துரையிடுக