லண்டன்: இராக் மற்றும் ஆப்கான் போரை எதிர்த்து சவப்பெட்டி பேரணி நடத்த திட்டமிட்டு இருந்த Islam4UK என்ற அமைப்பை பிரிட்டன் அரசு தடை செய்துள்ளது.
வரும் வியாழன் அன்று இந்த தடை உத்தரவு அமுலுக்கு வரும், அந்த அமைப்பில் அங்கம் வகிப்பவர் கிரிமினல் குற்றவாளியாக கருதப்படுவர், 10 ஆண்டு வரைக்கு சிறை தண்டனை பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழ்நிலையில் அந்த அமைப்பு இந்த பேரணியை ஒத்திவைத்துள்ளது. ௦௦௦௦௦௦௦பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு கொள்கையை விமர்சனம் செய்ததால் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது அரசு என்று Islam4UK வின் தலைவர் அன்ஜும் சௌத்திரி தெரிவித்துள்ளார்.தங்கள் அமைப்பின் அங்கத்தினருக்கும் தீவிரவாததுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று BBC'க்கு தெரிவித்துள்ளார்.
source:twocircles.net
0 கருத்துகள்: on "இராக் மற்றும் ஆப்கான் போரை எதிர்த்து சவப்பெட்டி பேரணி நடத்த திட்டமிட்டிருந்த அமைப்பிற்க்கு பிரிட்டன் அரசு தடை"
கருத்துரையிடுக